இந்தியா---------10.65
குவைத்-----------1.95
பிலிப்பைன்ஸ்-----2.10
தாய்லாந்த்--------7.90
சிங்கப்பூர்-------10.05
ரொமானியா-----12.75
அயர்லாந்த்------9.75
அமெரிக்கா------11.05
போர்ச்சுக்கல்----11.20
மால்டோவா-----17.25
சிலி------------10.46
கனடா---------11.65
நியுசிலாந்த்-----12.00
இஸ்ரேல்--------6.25
ஸ்விட்சர்லாந்த்--17.50
ஆஸ்திரேலியா--10.90
சவுத் கொரியா--23.75
பெல்ஜியம்-----21.30
பிரான்ஸ்-------18.30
ஜப்பான்-------24.20
ரஷ்யா---------36.15
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலில் 'கால் அப்' என்ற அமைப்பு தற்கொலைகளின் விகிதாச்சாரத்தை நாடுவாரியாக கணக்கெடுத்து வெளியிட்டுள்ளது. தற்கொலைகளின் விகிதாச்சாரம் மத நம்பிக்கை உள்ளவர்களை விட மத நம்பிக்கை அற்றவர்களிடத்தில் அதிகரித்துள்ளது என்றும் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் தற்கொலைகளின் விகிதாச்சாரம் அதிகரித்துள்ளதை நாம் பார்க்க முடிகிறது. இந்த நாடுகளில் உள்ள மக்கள் கிறித்தவத்தை பின்பற்றினாலும் 90 சதவீத மக்கள் மத நம்பிக்கை அற்றவர்களாகவே உள்ளனர். நமது இந்தியாவிலும் தற்கொலைகளின் விகிதாச்சாரம் அதிகரித்துள்ளதைப் பார்க்கிறோம். பி.சயினாத் என்பவர் ஹிந்து நாளேட்டில் 'சென்ற பத்தாண்டில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 30000' என்கிறார்.
என் பள்ளி தோழன் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டான். 10 ஆம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்த அவன் படிக்க நினைத்தது மருத்துவம. அவனது தகப்பனார் அவனை சேர்த்ததோ பொறியியல் கல்லூரியில். தற்கொலைக்கு இதுதான் காரணம்.
அடுத்து இலங்கை தமிழருக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாரையும் எடுத்துக் கொள்ளலாம். இலங்கைத் தமிழருக்காக தமிழ் மண்ணில் போராட்டம் நடத்தி இருக்கலாம். அல்லது கள்ள தோணியில் சென்று இலங்கை ராணுவத்தை எதிர்த்து போரிட்டு இறந்திருக்கலாம். அதை விடுத்து தனது குடும்பத்தை கொஞ்சம் கூட எண்ணிப் பார்க்காமல் தனது உயிரை மாய்த்து கொண்டதால் எதை சாதித்து விட்டார் முத்துக்குமார்? சில தலைவர்களை சிறையில் தள்ளியதைக் கூட பொறுக்க முடியாமல் தீக்குளித்து சாகும் நமது கழக கண்மணிகளையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.
இதற்க்கெல்லாம் என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? மன நிம்மதி இழப்பதுதான் முதற்காரணம். ஒரு மனிதனுக்கு துன்பம் ஏற்படும் போது தனக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எங்கு இறக்கி வைப்பது என்ற தடுமாற்றத்தில் விளைவதுதான் அநேக தற் கொலைகள். எந்த மனிதன் இறை நம்பிக்கையில் சற்றும் தளராமல் தனது வாழ்க்கையை செலுத்துகிறானோ அவன் எந்த நிலையிலும் தற்கொலைகளை நாட மாட்டான். பல முஸ்லிம் நாடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கெல்லாம் தற்கொலைகளின் விகிதாச்சாரம் மிக மிக குறைவாகவே இருப்பதை பார்க்கிறோம். இதற்க்கெல்லாம் காரணம் அந்த மக்களின் வாழ்க்கையே இஸ்லாமாக இருப்பதுதான்.
இறந்தவர்களுக்காக மற்றவர்கள் பிரார்த்தனை செய்யும் விதமாக ஒரு தொழுகை முஸ்லிம்களிடத்தில் உண்டு. இந்த தொழுகையைக் கூட தற்கொலை செய்து கொண்டவருக்காக தொழக் கூடாது என்று முகமது நபி முஸ்லிம்களுக்கு கட்டளை இடுகிறார்.
'நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.'
-குர்ஆன்: 13:28
'உங்களையே கொன்று விடாதீர்கள். இறைவன் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.'
-குர்ஆன்: 4:29
'யார் ஒரு கூரான ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது கையில் அந்த கூராயுதத்தை வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டே இருப்பார். யார் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் விஷத்தை கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக் கொண்டே இருப்பார். யார் மலையின் மீதிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் தள்ளப்பட்டு மேலிருந்து கீழே என்றைக்கும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டே இருப்பார்.' என்று முகமது நபி சொல்லக் கேட்டவர் அபுஹூரைரா.
நூல்: முஸ்லிம் 157
என்றெல்லாம் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கட்டளை இடுவதாலும், முஸ்லிம்கள் தங்களின் மன அழுத்தத்தை ஒரு நாளைக்கு ஐந்து வேளை இறைவன் முன்னால் இறக்கி வைத்து விடுவதாலும் முஸ்லிம்களிடத்தில் தற்கொலைகளின் விகிதாச்சாரம் குறைவாக உள்ளது. இந்துக்களில் கூட மதப்பற்று உடையவர்கள் தற்கொலைகளை நாடுவது இல்லை என்பதையும் பார்க்கிறோம்.
குவைத்-----------1.95
பிலிப்பைன்ஸ்-----2.10
தாய்லாந்த்--------7.90
சிங்கப்பூர்-------10.05
ரொமானியா-----12.75
அயர்லாந்த்------9.75
அமெரிக்கா------11.05
போர்ச்சுக்கல்----11.20
மால்டோவா-----17.25
சிலி------------10.46
கனடா---------11.65
நியுசிலாந்த்-----12.00
இஸ்ரேல்--------6.25
ஸ்விட்சர்லாந்த்--17.50
ஆஸ்திரேலியா--10.90
சவுத் கொரியா--23.75
பெல்ஜியம்-----21.30
பிரான்ஸ்-------18.30
ஜப்பான்-------24.20
ரஷ்யா---------36.15
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலில் 'கால் அப்' என்ற அமைப்பு தற்கொலைகளின் விகிதாச்சாரத்தை நாடுவாரியாக கணக்கெடுத்து வெளியிட்டுள்ளது. தற்கொலைகளின் விகிதாச்சாரம் மத நம்பிக்கை உள்ளவர்களை விட மத நம்பிக்கை அற்றவர்களிடத்தில் அதிகரித்துள்ளது என்றும் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் தற்கொலைகளின் விகிதாச்சாரம் அதிகரித்துள்ளதை நாம் பார்க்க முடிகிறது. இந்த நாடுகளில் உள்ள மக்கள் கிறித்தவத்தை பின்பற்றினாலும் 90 சதவீத மக்கள் மத நம்பிக்கை அற்றவர்களாகவே உள்ளனர். நமது இந்தியாவிலும் தற்கொலைகளின் விகிதாச்சாரம் அதிகரித்துள்ளதைப் பார்க்கிறோம். பி.சயினாத் என்பவர் ஹிந்து நாளேட்டில் 'சென்ற பத்தாண்டில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 30000' என்கிறார்.
என் பள்ளி தோழன் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டான். 10 ஆம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்த அவன் படிக்க நினைத்தது மருத்துவம. அவனது தகப்பனார் அவனை சேர்த்ததோ பொறியியல் கல்லூரியில். தற்கொலைக்கு இதுதான் காரணம்.
அடுத்து இலங்கை தமிழருக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாரையும் எடுத்துக் கொள்ளலாம். இலங்கைத் தமிழருக்காக தமிழ் மண்ணில் போராட்டம் நடத்தி இருக்கலாம். அல்லது கள்ள தோணியில் சென்று இலங்கை ராணுவத்தை எதிர்த்து போரிட்டு இறந்திருக்கலாம். அதை விடுத்து தனது குடும்பத்தை கொஞ்சம் கூட எண்ணிப் பார்க்காமல் தனது உயிரை மாய்த்து கொண்டதால் எதை சாதித்து விட்டார் முத்துக்குமார்? சில தலைவர்களை சிறையில் தள்ளியதைக் கூட பொறுக்க முடியாமல் தீக்குளித்து சாகும் நமது கழக கண்மணிகளையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.
இதற்க்கெல்லாம் என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? மன நிம்மதி இழப்பதுதான் முதற்காரணம். ஒரு மனிதனுக்கு துன்பம் ஏற்படும் போது தனக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எங்கு இறக்கி வைப்பது என்ற தடுமாற்றத்தில் விளைவதுதான் அநேக தற் கொலைகள். எந்த மனிதன் இறை நம்பிக்கையில் சற்றும் தளராமல் தனது வாழ்க்கையை செலுத்துகிறானோ அவன் எந்த நிலையிலும் தற்கொலைகளை நாட மாட்டான். பல முஸ்லிம் நாடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கெல்லாம் தற்கொலைகளின் விகிதாச்சாரம் மிக மிக குறைவாகவே இருப்பதை பார்க்கிறோம். இதற்க்கெல்லாம் காரணம் அந்த மக்களின் வாழ்க்கையே இஸ்லாமாக இருப்பதுதான்.
இறந்தவர்களுக்காக மற்றவர்கள் பிரார்த்தனை செய்யும் விதமாக ஒரு தொழுகை முஸ்லிம்களிடத்தில் உண்டு. இந்த தொழுகையைக் கூட தற்கொலை செய்து கொண்டவருக்காக தொழக் கூடாது என்று முகமது நபி முஸ்லிம்களுக்கு கட்டளை இடுகிறார்.
'நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.'
-குர்ஆன்: 13:28
'உங்களையே கொன்று விடாதீர்கள். இறைவன் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.'
-குர்ஆன்: 4:29
'யார் ஒரு கூரான ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது கையில் அந்த கூராயுதத்தை வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டே இருப்பார். யார் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் விஷத்தை கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக் கொண்டே இருப்பார். யார் மலையின் மீதிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் தள்ளப்பட்டு மேலிருந்து கீழே என்றைக்கும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டே இருப்பார்.' என்று முகமது நபி சொல்லக் கேட்டவர் அபுஹூரைரா.
நூல்: முஸ்லிம் 157
என்றெல்லாம் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கட்டளை இடுவதாலும், முஸ்லிம்கள் தங்களின் மன அழுத்தத்தை ஒரு நாளைக்கு ஐந்து வேளை இறைவன் முன்னால் இறக்கி வைத்து விடுவதாலும் முஸ்லிம்களிடத்தில் தற்கொலைகளின் விகிதாச்சாரம் குறைவாக உள்ளது. இந்துக்களில் கூட மதப்பற்று உடையவர்கள் தற்கொலைகளை நாடுவது இல்லை என்பதையும் பார்க்கிறோம்.