வேதங்களில் ஒன்றினைந்து போரிட்ட போர் குறித்து

வேதங்களில் ஒன்றினைந்து போரிட்ட போர் குறித்து  
 
அகழ்போர் பற்றி அதர்வன வேதம்
அதர்வனவேதம் நூல் 20, அத்தியாயம் 21, சுலோகம் 6, ''விசுவாசிகளின் இறைவன், போர்க்களத்தில் பத்தாயிரம் எதிரிகளை எதிர்கொள்வதில் அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளித்து போரின்றி வெற்றியை வழங்கினான். எதிரிகள் ஆடல் பாடலுடன் போர்க்களத்தில் திளைத்திருந்தும் கூட"

இந்து மதத்தில் அவதாரங்களும், இறைத்தூதர்களும்

இறைத்தூதர்களுக்கென இந்து மதத்தில் எந்தக் கோட்பாடும் இல்லை. இருப்பினும் அவதாரங்கள் என்று கோட்பாடு உள்ளது. ''அவ்தார்" என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு ''கீழே இறங்கி வருதல் "எனப் பொருள். அவ்தார் என்னும் சொல்லுக்கு

இந்து சுலோகங்கள் உணர்த்தும் உண்மைகள்

சென்ற தொடரில் அதர்வண வேதம் 20-ஆம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13 வரை பார்த்தோம். அந்த சுலோகங்களின் விளக்கங்களைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

1. சமஸ்கிருத வார்த்தை ''நரஷன்ஸா" என்றால்

இந்துவத்தில் புனித நூல்கள்

இந்துவத்தில் புனித நூல்கள்
இந்துவத்தில் புனிதம் வாய்ந்த இருவகை நூல்கள் உள்ளன 1) ஸ்ருதி 2) ஸ்மிருதி.

ஸ்ருதி
ஸ்ருதி என்றால் கேட்கப்பட்டு, உணரப்பட்டு, புரியப்பட்டது அல்லது அருளப்பட்டது, மிகப் பழமையான

இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கைகள்




இஸ்லாம் என்பது என்ன?
இஸ்லாம் என்ற அரபிப் பதத்திற்கு சமர்ப்பணம் என்றும் சமாதானம் என்றும் பொருள் உண்டு. அகிலங்கள் அனைத்தையும் படைத்த இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து வாழ்வதன் மூலம் பெறக்கூடிய சமாதானமே இஸ்லாம் ஆகும். வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இறைவனின்

ஹிஜாப் அடக்குமுறைச் சின்னமல்ல

கனடாவிலேயே பிறந்த வளர்ந்த இந்த முஸ்லிம் பெண்மணி, பாரம்பர்யமிக்க ஹிஜாப் உடையை அணிய முடிவெடுத்துக் கொண்டார். அவர் ஹிஜாபை அணிவதைப் பார்த்த மக்கள் அவரை ஒரு தீவிரவாதியாக அல்லது அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட

இஸ்லாத்தின் பால் அமெரிக்க முஸ்லிம் பெண்கள்


பெற்றோர்களின் மத நம்பிக்கை அவர்களின் ஆன்மீக எதிர்பார்ப்பை நிறைவேற்றாதாலும் வரும் கேள்வி அறிவுக்கு புராதன நம்பிக்கைகள் ஈடு கொடுக்க முடியாததாலும் அமெரிக்காவில் இஸ்லாத்தின்

விரும்பி இஸ்லாத்தைத் ஏற்கும் ஜெர்மன் பெண்கள்!






ப்போதும் இல்லாத அளவுக்கு இவ்வருடம் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

சுவாரசியமான விஷயம் இதில் என்னவென்றால் இஸ்லாத்தை தழுவியுள்ள 1000க்கும் மேற்பட்டோரில் பெண்களே அதிகம் என்பதுதான்.

இஸ்லாம்பற்றிய ஜப்பானிய பெண்

Largest Mosque in Tokyoசமீபத்தில் நடைபெற்ற வளைகுடா விளையாட்டுப்போட்டிகளுக்கான செய்திகளைத் தொகுப்பதற்காக கத்தர் நாட்டிற்கு வந்திருந்த ஜப்பானின் பிரபல விளையாட்டு செய்திபத்திரிகையாளரான மயோக்கோ என்ற கிறிஸ்துவ பெண் சென்றவாரம் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்.

ஹிஜாப் - சமூக சிக்கல்களைச் சமாளிக்க சில ஆலோசனைகள்!


இது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட ஹிஜாப் முறையை விரும்பிப் பின்பற்றும் பெண்கள், சமூகத்தில் தினந்தோறும் சந்திக்கும் பிரச்னைகளைக் குறித்த ஓர் உரையாடல்! இவ்வாக்கத்தை தமது தளத்தில் பதிக்க அனுமதி அளித்த சத்தியமார்க்கம்.காம் தளத்தினருக்கு எனது நன்றி!

அன்புச் சகோதரியே,

நீங்கள் ஹிஜாப் அணியத் தொடங்கியது முதல் பல்வேறு தரப்பிலிருந்து

கண்ணியம் கொடுத்த ஹிஜாப்! - ஸாரா போக்கர்


சுதந்திரம் பற்றிப் பேசிப்பேசி அதன் எல்லை எதுவென்பதை ஒவ்வொரு முறையும் வரையறுத்து பின் அதை அறுத்து பின் புதிதாய் வரையறுத்து மனித மனம் எங்கோ தேடி அலைந்து கொண்டிருக்கிறது. மனிதனைப் படைத்த இறைவனே, மனித உள்ளங்களில் ஓடக்கூடிய உணர்வுகளை

ஆண்களும் பெண்களும்

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள். இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) 4:124
___________________________________________________

3:195 ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். 'உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்...

ஸூரத்துல் ஆலஇம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) 3:195
___________________________________________________

இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள். இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்.

ஸூரத்துல் பகரா (பசு மாடு) 2:221
___________________________________________________

கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு.

ஸூரத்துல் பகரா (பசு மாடு) 2:228
___________________________________________________

மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு. (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு.

ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) 4:32
____________________________________________________

4:7 பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே¢ (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.

ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) 4:7

ஆண்களுடன் கைகுலுக்க மறுத்த முஸ்லிம் பெண்!


ஆண்களுடன் கைகுலுக்க மறுத்த முஸ்லிம் பெண்
தடையை எதிர்த்து வழக்குப்போட்டு வெற்றி பெற்றார்



ஆர்ம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்த முஸ்லிம் பெண், ஆண்களின் கைகளை குலுக்க மறுத்து விட்டார். இதனால் பயிற்சிக் கல்லூரி அவரைச் சேர்ப்பதற்கு தடை விதித்து விட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த அவர் அதில் வெற்றி பெற்றார்.

20 வயது பாத்திமா

நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் பெண் பாத்திமா அம்கர். 20 வயதான இவர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேருவதற்காக மனு செய்து இருந்தார்.இதற்கான நேர்முகத்தேர்வுக்கு அவர் அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவரை நேர்முகத் தேர்வு செய்ய இருந்த ஆசிரியர்கள் கைகுலுக்குவதற்காக கையை நீட்டியபோது கைகொடுக்க மறுத்து விட்டார்.

மதக்கட்டுப்பாடு

12 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுடன் எந்தவிதமான ஸ்பரிசத் தொடர்பும் கொள்ளக்கூடாது என்பது இஸ்லாமிய மதக் கட்டுப்பாடு என்று பாத்திமா அதற்கு விளக்கமும் கொடுத்தார்.

இதை கல்லூரி நிர்வாகம் ஏற்க மறுத்து விட்டது. கைகுலுக்குவது டச்சு சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரியாதை தெரிவிக்கும் அடையாளம் ஆகும் என்று கூறிய நிர்வாகம், அவரைச் சேர்ப்பதற்கு தடைவிதித்தது.

கோர்ட்டில் வழக்கு
இதை எதிர்த்து பாத்திமா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சமமாக நடத்தும் கமிஷன் தடை விதித்ததன் மூலம் பாத்திமாவுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது என்று கூறி பாத்திமாவை கல்லூரியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிட்டு உள்ளது.

ஒதுக்கும் ஆபத்து

முஸ்லிம்களின் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சமுதாயத்தில் இருந்து முஸ்லிம் பெண்களை ஒதுக்கி வைக்கும் ஆபத்தை கல்வி நிலையங்கள் ஏற்படுத்தி விடும் என்றும் கமிஷன் எச்சரித்தது.

இதே கமிஷன் தான் கடந்த ஆண்டு தலையில் முக்காடு போட்டுக்கொண்டு வர மறுத்த முஸ்லிம் பெண் சமீராவை ஆசிரியராகச் சேர்க்க மறுத்த இஸ்லாமிய பள்ளிக்கூடத்துக்கு எதிராக தீர்ப்பு கூறியது.

ஹிஜாப் தரும் சுதந்திரம்!



ன்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?
 

நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?


கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?
கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?


பர்தாவைப் பிடித்திழுக்கும் பிரதிபா படீல்


ந்திய ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திருமதி.பிரதிபா படீல், "இந்தியப் பெண்கள் பர்தா அணிவது மடமை; இப்பழக்கம் முகலாயர்களின் படையெடுப்பிலிருந்து பெண்களைக் காத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்டது. தற்போது நாம் சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோம். ஆகவே இப்பழக்கத்தை கைவிட வேண்டும்!" என்று சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றியுள்ளார்.


ராஜஸ்தானில் ஆளுநராக இருந்தபோது பா .ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட மதமாற்றத் தடை சட்டத்தை கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பி, பலரின் புருவங்களை உயர்த்திய பெருமை திருமதி. பிரதிபா படீலுக்கு உண்டு. முதன் முதலாக ஒரு பெண்ணை ஜனாதிபதியாகப் பெறவிருக்கும் அருமையான சூழலில் திருமதி. பிரதிபா பட்டீலின் இப்பேச்சு தேவையற்றது என்றே பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

பர்தாவைப் பற்றிய உண்மையான வரலாறு சார்ந்த தகவல்களை அறியாமல், பரிவாரங்களின் கொள்கைப் பரப்புச் செயலாளர்போல் சம்பந்தமே இல்லாமல் மொகலாயர்களைப் பர்தாவுக்குத் தொடர்பு படுத்தி இருப்பதை அவருடைய அறியாமை என்பதா அல்லது இஸ்லாமிய விரோதம் என்பதா?

மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் முதல் குடிமகள் பதவிக்கு போட்டியிடும் ஒருவரிடமிருந்து, இரண்டாவது பெரும்பான்மையாக இருக்கும் இந்திய முஸ்லிம்களின் பழக்கத்தைப் பற்றி விமர்சிப்பது எந்த வகையில் அவரின் தரத்தை உயர்த்தும்?

இஸ்லாம் உலகில் பரவலான கி. பி ஆறாம் நூற்றாண்டில் என்பதும் முகலாயர்களின் இந்திய வருகை பதினான்காம் நூற்றாண்டுகளிலிருந்து தொடங்கியது என்பதும் நன்கு அறியப்பட்ட வரலாறு. இந்த வரலாற்று உண்மையை அறியாமல், முற்போக்காகப் பேசுகிறோம் என்று மூக்குடைபடுவது தேவையா?

"பண்டைய இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் கவுரவமாகவே இருந்துள்ளார்கள்" என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சித்துள்ளார் திருமதி. பிரதிபா படீல். ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழக முதலமைச்சரின் வாழ்த்துக் கவிதை, பண்டைய இந்தியாவில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்ற உண்மையை போட்டுடைக்கிறதே!

நாறுகின்ற மட நம்பிக்கைக் குட்டையில் ஊறுகின்ற மட்டையாகி; நாணம்,அச்சம்,மடம்,பயிர்ப்பு என நாலு வேத வழி நடக்கும் பெட்டையாகி;...

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதெற்கு என்பதுடன் நிறுத்தாமல் அவள் ஆளன் மறைந்த பின்னர் அவளுக்கு வாழ்வுதான் எதற்கு-என்று
அனலிடை அவளைக் கருக்கி ஆர்த்தெழும் கொடிய சாத்திரப் புனலிடை அவள் உடலைக் கழுவி அந்த உயிரிலா சிலைக்குப் பொட்டிட்டு பூ முடித்து அம்மன் அவள்தான் என்று பூசை புனஸ்காரம் செய்து...

அண்டை மாநிலமான கேரளாவில் பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டிருந்ததும் ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் 'சதி' எனும் உடன்கட்டை ஏ(ற்)றும் துர்ப்பழக்கம் இன்றும் நடைமுறையில் இருப்பதும் முதல் குடிமகளாக வரவிருக்கும் பிரதிபா படீலுக்குத் தெரியதா? அவற்றையும் பெண்கள் கைவிட முன்வரவேண்டும் என்று சொல்லத் தடையாக இருந்தது எது என்றும் விளக்குவாரா?

முற்காலத்தில்? 'பர்தா' அணியும் பழக்கம் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ஏற்றுக்கொண்டது என்று வைத்துக் கொண்டாலும், அதனைக் கைவிடுவதால் இந்தியப் பெண்கள் அத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து தப்பி விடுவார்கள் என்று அர்த்தமா? தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் உலகநாடுகளின் சராசரியை விட அதிகம். இதற்கெல்லாம் திருமதி . பிரதீபா என்ன பதில் வைத்திருக்கிறார்?

மாநில ஆளுநராக இருந்துகொண்டிருக்கும் இந்த நிமிடம்வரை அவரும்கூட தலையை மூடிக் கொண்டு மடமையான பர்தாவுடன்தானே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்! பர்தா அணிந்தாலும் பெண்கள் முன்னேறுவதற்கு எவ்வித இடையூறும் இருக்காது என்பதற்கு தானே முன்னுதாரணமாக இருந்து கொண்டு முரண்பாடாகப் பேசுவதற்கு இவருக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம்தான் என்னவோ? பர்தா அணிந்து பிரதமராக மிளிர்ந்த இந்திரா காந்தி, பங்களாதேஷ் சேக் ஹசீனா, கலீதா ஜியா, பாகிஸ்தான் பேனசீர் புட்டோ இவர்களெல்லாம் சிறப்பாக ஜொலிக்க வில்லையா?

அரசியல்வாதிகள் தவறாக அறிக்கை விடுவதும், அதனால் பிரச்சினை எழுந்தால் சம்பந்தப்பட்ட கட்சிகள் "அவரின் தனிப்பட்ட கருத்து" என்று சப்பைக் கட்டுவதும், தங்கள் அறிக்கைகள் "தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுது" என்று நழுவுவதும், "நான் அப்படிச் சொல்லவே இல்லை ; பத்திரிக்கைகயாளர்கள்தான் திரித்து எழுதி விட்டார்கள் " என்று பல்டி அடிப்பதும்தான் நடைமுறை. இதில் ஏதாவது ஒன்றைச் செய்து, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வாழ்த்துக்கள் திருமதி .பிரதிபா படீல் அவர்களே!

பின்குறிப்பு: 2002 இல் குஜராத்தில் முஸ்லிம்களை நரேந்திரமோடி தலைமையில் நரவேட்டையாடி முடித்த பின்னர், மாஜி பிரதமர் வாஜ்பாய் , "இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டுத் தலைவர்களை சந்திப்பேன்?" என்று புலம்ப வைத்த சூழலில் மதசார்பற்ற அரசு என்று காட்டிக் கொள்ள கைகொடுத்த ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு அன்று சொல்லப்பட்ட தகுதிகள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன; எதிர் அணியினர் முன்மொழிந்தார்கள் என்று ஈகோ பார்க்காமல் அவரையே முன்னிருத்தலாம்.

"இல்லை! இல்லை!! இது பெண்கள் யுகம்!" என்று சமத்துவ முழக்கமிடுபவர்கள் , சென்ற முறை அப்துல் கலாமுக்கு இணையாக கம்யூனிஸ்ட்டுகளால் நிறுத்தப் பட்ட கேப்டன் லெட்சுமி சேய்காலையும் பரிசீலிக்கலாமே!

ஆடையில் தான் உள்ளது நாகரிகம் - டாக்டர் டி. நாராயண ரெட்டி!


சென்னை. பரபரப்பான நந்தனம் சிக்னல். பச்சை விளக்குக்காகக் காத்திருக்கிறேன்.

"விர்ர்ரூம்ம்ம் விர்ர்ரூம்ம்ம்..." சத்தத்துடன் என் காரை உரசிவிடுவது மாதிரி பக்கத்தில் வந்து நின்றது அந்த பைக். ஓட்டி வந்த இளைஞனின் பின் இருக்கையில் ஒரு பெண். இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள். காற்றைக் கிழிக்கும் கூந்தல். ஸ்லீவ்லெஸ் லோகட் டாப்ஸ் - ஜீன்ஸில் இருந்தாள். முதுகுப்பக்கம் டாப்சுக்கும் ஜீன்சுக்கும் இடைவெளியில் பளீர் எனத் தேகம் தெரிய, கூடவே அவள் அணிந்திருந்த பேன்ட்டீஸின் லேபிளும் எட்டிப் பார்த்தது. தோள்பட்டையிலும் இடுப்பிலும் டாட்டூஸ் மின்னல்கள். சிக்னலில் நின்ற வாகனங்களின் கண்கள் அந்தப் பெண்ணையே மொய்த்தன. பச்சை சிக்னல் விழுந்து சில விநாடிகள் கழித்துத்தான் சக்கரங்கள் சுழலவே ஆரம்பித்தன. இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.


இன்னொரு சம்பவம். 'தனது அப்பா மீது ரொம்பப் பாசமுடையவன் சதீஷ். அவனின் திருமணத்துக்குப் பிறகு அப்பா ஏனோ மகனிடம் அதிகம் பேசுவதில்லை. மருமகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. வீட்டைவிட வெளியில் இருப்பதையே விரும்பினார். சதீசுக்கு அப்பாவின் மனநிலை குறித்து சந்தேகம். தனியாக விசாரித்தபோது, அப்பா சொன்னார்: ''எப்படிச் சொல்றதுன்னு தெரியலைப்பா. உன் அம்மா செத்து இருபது வருஷமாச்சுப்பா. நான் ரொம்ப யோக்கியமாவே வாழ்ந்துட்டேன். உன் வொய்ஃப் எப்பப் பார்த்தாலும் நைட்டியிலயே திரியுது. அது ரொம்ப ஸ்டைலா வளர்ந்த பொண்ணு போல. எனக்குத்தான் மனசுக்கு ரொம்பக் கூச்சமா இருக்குப்பா!'' என்றார். அப்பா இப்போது இருப்பது முதியோர் இல்லத்தில்.

'இந்தியா சுதந்திர நாடு. நாங்கள் சுதந்திரப் பிரஜைகள். நாங்கள் எப்படி வேண்டுமானாலும் உடுத்துவோம்' என்பது சரிதான். ஆனால், அதற்கு ஓர் எல்லை உண்டு. எங்களுக்கு இது வசதியாக இருக்கிறது என்று உடுத்துவது எதையும் யாரும் மறுக்க மாட்டார்கள். கட்டுப்பாடு, கலாசாரம் என்றிருந்த நம் வீடுகளுக்குள் நம் வீட்டுப் பெண்களின் விருப்ப உடைகளான சுடி தார், நைட்டி, ஜீன்ஸ் என எல்லாம் உள்ளே அனுமதித்தோமே... அதுதான் மனப் பக்குவம்.

ஆனால், நாகரிகம் என்ற பெயரில் ஒரு சிலர் இப்படி அரைகுறையாக ஆபாசமாக ஆடை உடுத்துவது, மற்றவர்களின் கவனம் ஈர்ப்பதற்காக. இந்த மனநிலைக்கு 'attention drawing behaviour'என்று பெயர். பத்து பேரின் கவனத்தை ஈர்த்தேன் என்று கர்வம்கொள்ளும் அதே நேரத்தில், பத்து பேரின் தவறான அபிப்ராயத்தையும் சம்பாதிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ அப்படித்தான் மற்றவர்கள் உங்களிடம் நடந்துகொள்வார்கள். எதைக் கொடுக்கிறோமோ,அது தான் திரும்பக் கிடைக்கும். யாரும் அரை குறை உடையுடன் கோயிலுக்குப் போவது இல்லையே. நேர்முகத் தேர்வு என்றால், ஃபார்மல் டிரெஸ். திருமணம் என்றால் பட்டுப்புடவை என எல்லாவற்றுக்கும் முறை ஒன்று இருக்கிறது. பொது இடங்களுக்கு வரும்போது மட்டும் ஏன் அரைகுறையாக உடுத்த வேண்டும்?

நாகரிகம் என்கிற பெயரில் இப்படியெல்லாம் பெண்கள் ஆடை உடுத்துவதற்கு மனப் பக்குவம் இல்லாததே காரணம். மனப் பக்குவம் இருக்கிற எவரும் இப்படி உடுத்த மாட்டார்கள்!

டாக்டர் டி. நாராயண ரெட்டி (ஆனந்த விகடனில்)

ஹிஜாப் அணிந்தால் வேலை இல்லையா? எதிர்த்துத் தொடுத்த வழக்கில் வெற்றி!

சகோதரி புஷ்ரா நோவா

ஹிஜாப் அணிந்து பணிக்கு வந்த ஒரே காரணத்தினால், பத்தொன்பது வயதுள்ள புஷ்ரா நோவா என்ற முஸ்லிம் பெண், தான் பணிபுரியும் ஒப்பனை நிலையத்தின் உரிமையாளர் ஸாரா டெஸ்ரோஸிர்ஸ் என்பவரால் கடந்த மே-2008 இல் பணி நீக்கம் நீக்கப்பட்டுள்ளார்.


"பெண் வாடிக்கையாளர்கள் விதவிதமான அலங்காரம் செய்து கொள்ளும் என் அழகு நிலையத்தில், என் வியாபாரத்திற்கு பாதகமாக தலையினை மறைத்து பணிக்கு வந்ததாலேயே இவரை பணி நீக்கம் செய்ததாக" த சன் இதழுக்கு அளித்த பேட்டியில் கடை உரிமையாளர் ஸாரா ஒப்புக் கொண்டுள்ளார்.

வேலை போன விரக்தியோடு வெளியேறிய புஷ்ரா நோவா, மனம் சோர்ந்து போய் உட்கார்ந்து விடாமல், துணிவுடன் நீதிமன்றத்தை அணுகி கடை உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்.

இருவரையும் அழைத்து விசாரித்த இலண்டனில் அமைந்துள்ள பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கான நீதிமன்றம் (British employment tribunal panel) இறுதியில் புஷ்ரா நோவாவிற்கான வேலை பறி போனதற்காகவும் உணர்வுகள் புண்பட்டமைக்காகவும் நஷ்ட ஈடாக 4000 பிரிட்டிஷ் பவுண்ட்களை வழங்கியுள்ளது. அத்துடன் தலையினை மறைக்கும் ஒரு துணி ஒருவரின் பணியை எங்ஙனம் பாதிக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

மேலும், மத ரீதியிலான பிரச்னையாக உருவெடுக்காமல் தவிர்க்க, தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கும் வன்கொடுமையாகத் தான் இதனைக் கருத வேண்டும் என்று இவ்வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இஸ்லாமியர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் இவ்வகைச் செயல்கள் பிரிட்டனில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பதற்கும் இஸ்லாமியர்கள் அதனைத் துணிவோடு எதிர்கொண்டு சட்ட ரீதியிலான வெற்றிகளைப் பெற்று வருகின்றனர் என்பதற்கும் இத்தகைய நிகழ்வுகள் சான்றாக உள்ளன.

ஹிஜாப் அணிந்ததால் பள்ளியிலிருந்து மாணவி நீக்கம்! எதிர்த்து தொடுத்த வழக்கில் வெற்றி!


முஸ்லிம் பள்ளி மாணவி ஒருவர் தனது வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்த ஒரே காரணத்திற்காக டி.ஸி (Transfer Certificate) கொடுத்து பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நடந்தது பிரான்ஸிலோ அல்லது டென்மார்க்கிலோ அல்ல. கேரளாவின் ஆலப்புழாவில் தான்.


இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கிற்கு எதிரொலியாக, பள்ளியின் பிரின்சிபலை சஸ்பெண்ட் செய்யுமாறு கடந்த சனிக்கிழமை, 05-06-2010 அன்று அழைப்பாணை (சம்மன்) அனுப்பி, கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் உள்ள ஆங்கிலப் பள்ளி ஒன்றின் பிரின்ஸிபலாகப் பணிபுரியும் மேரி ஜெஸிண்டா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேரி ஜெஸிண்டா எதிர்வரும் ஜுலை 31 ந்தேதிக்குள் நீதிமன்றத்திற்கு ஆஜர் ஆகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கேரள முதன்மை நீதிமன்றத்தின் குற்றவியல் நீதிபதியான முஹம்மத் வஸீன், இது தொடர்பான அழைப்பாணையைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன், நபலா என்ற பத்தாம் வகுப்புப் பயிலும் முஸ்லிம் மாணவி, தனது வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்த ஒரே காரணத்தால் டி.ஸி கொடுத்து பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். நீக்குவதற்கு "பள்ளியின் சீருடைக்கு இது முரணாக உள்ளது" என்ற காரணம் காட்டப்பட்டது.

குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு முடியும் வரையிலாவது தனது மகளைப் பள்ளியிலிருந்து நீக்க வேண்டாம் என்று எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் பள்ளி நிர்வாகம் கறாராக மறுத்து விட்டது என்கிறார் மாணவி நபலாவின் தந்தை நஜீர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவி நபலாவின் தந்தை நஜீர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததை அடுத்து நடைபெற்ற தொடர் விசாரணை மற்றும் சமர்ப்பிக்கப் பட்ட ஆதாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கு இ.பி.கோ 504 (அமைதியைக் குலைக்கும்படியான அவமதிப்பைச் செய்தல்) சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பள்ளியின் பிரின்ஸிபலை சஸ்பெண்ட் செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

இவ்விஷயம் அதிக சர்ச்சைக்கு உள்ளானதால், தீர்வு காணும் பொருட்டு மாவட்ட ஆட்சியாளர் பி. வேணுகோபால் அவர்களின் முன்னிலையில் கடந்த மாதம், ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தற்போது பிரின்சிபலை சஸ்பெண்ட் செய்தபிறகு, மாணவி நபலாவை மீண்டும் தமது பள்ளியில் இணைந்து கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பினை நிராகரித்துள்ள மாணவி நபலா தற்போது வேறு பள்ளியில் பயின்று வருகிறார்.

இஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை (ஹிஜாப் சட்டம்)

எழுத்து: சகோதரி. சபீனா, ஃபிரான்ஸ்

மேற்கத்திய நாடுகளில் முதல் நாடாக சட்டப்பூர்வமாக ஃபிரான்ஸில் அமலுக்கு வந்துள்ள நிகாப் மீதான தடையுத்தரவு இன்று உலகெங்கிலும் உள்ள மீடியாக்களின் பேசு பொருளாக உள்ளது. 

இந்நிலையில், ஹிஜாப் தொடர்பான சில விஷயங்களைப் பார்ப்போம். ஹிஜாப் என்றால் முகம் முழுவதும் மூடி, உடல் முழுவதும் மறைத்து, கையுறைகள், மற்றும் காலுறைகள், அணிவதை விட நம்மை படைத்த அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த அளவின் படி மறைத்தாலே போதுமானது. முதலில் ஹிஜாபை பேணுவது எப்படி என்று பார்ப்போம்.


எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முக்காடுகளை கொண்டு அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல் குரான் 24:31)

பொது இடங்களில் பெண்கள் தனது பார்வையைத் தாழ்த்தி கொள்ளுமாறு அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டுள்ளான், நாம் இதை சரியாக கடைபிடிக்கிறோமா?நம்மில் பெரும்பாலான பெண்கள் இதை சரியாக கடைபிடிப்பதே இல்லை. தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம் என்றால் அலங்காரத்தில் தெரிவது என்பது முகம், முன்கைகள் மட்டும்தான் மற்றவற்றை நாம் ஆடையால் மறைத்துவிட வேண்டும் தவிர முக்காடுகளை மார்பின் மீது போட்டுக் கொள்ளட்டும் என அல்லாஹ்வே சொல்கிறான். எனவே நாம் தலையை முக்காடிட்டு மறைக்க வேண்டும். நமது இஸ்லாமிய பெண்கள் வெளிநாட்டிற்கு வந்து விட்டால் நம்மை யார் கேட்பது என்பது போல் தலையை மறைக்காமலும் ஆடைகளை சரியான விதத்தில் அணியாமலும் நம்மில் எத்தனை பெண்கள் பொது இடங்களில் உலா வருகிறோம்? நம் பெற்றோர்கள், கணவன்மார்கள், மற்றும் பிள்ளைகள் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்க மாட்டார்கள் அனல் நம்மை படைத்த அல்லாஹ் கேட்பான் என்று என்றாவது அஞ்சினோமா? நாம் எங்கே இருந்தாலும் படைத்த ரப்புல் ஆலமீன் நம்மை பார்ப்பான், பார்க்கிறான் என்ற எண்ணம் உள்ளதா? என நம்மை நாமே சுய பரிசோதனை செய்தால்தான் தெரியும். எனவே நாம் ஆடைகள் இறுக்கம் இல்லாமலும் முகம் முன்கைகள் தவிர மற்ற பாகங்களை மறைத்தாலே போதுமானது. அது பர்தா போட்டால்தான் முடியும் என்பதில்லை, ஆடைகள் உடல் உறுப்புகள் தெரியதவாறும் முழுவதுமாக மூடப்பட்டும் கிடைக்கிறது. நாம் அதை போட்டுகொண்டாலே போதுமானது.

மேலும் முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை கீழ்காணும் ஹதீஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன் அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழகை நடத்தினார்கள் பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்படுமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்கு சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள் நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவிர்கள் என்று கூறினார்கள். அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து ஏன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள். நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதனிகள் மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1612)


மேலும் ('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காக தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) 'கஸ்அம்' குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்த போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்க விடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (6228)


சில பெண்கள் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு தலையில் முக்காடு போட்டுக் கொள்வதும் ஹிஜாப் என்று எண்ணுகின்றனர்.இதுவும் முற்றிலும் தவறாகும்.ஆண்களுக்கு ஒப்பான ஆடைகளையும் இறுக்கமான ஆடைகளையும் நமக்கு இஸ்லாம் தடுத்திருக்கிறது.ஆண்கள் பெண்களைப் போலவும் பெண்கள் ஆண்களைப் போலவும் நடக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புஹாரி 5885

‘இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒருசாரார் மாட்டு வால்களைப் போயன்ற சாட்டைகளைக் கையில் வைத்திருப்பார்கள். அவற்றால் மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். அவர்கள் ஒய்யாரமாக நடப்பார்கள். மற்றவர்களைத் தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களுடைய தலை ஒட்டகத்தின் திமில் களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லமாட்டார்கள். சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்-4316)

ஆண்கள் அணியும் எந்த ஆடையையும் பெண்கள் அணியக் கூடாது என்று பொருள் கொள்வதா? அல்லது மார்க்கத்தின் அடிப்படையில் ஆண்களுக்கு ஏற்ற ஆடையை பெண்களும் பெண்களுக்கு ஏற்ற ஆடையை ஆண்களும் அணியக் கூடாது என்று பொருள் கொள்வதா? அணியும் ஆடை என்று பொருள் கொள்வதை விட அணியத்தக்க ஆடை என்று பொருள் கொள்வது தான் பொருத்தமானது. இறுக்கமான பேண்ட்களாக இருந்தால் அது பெண்களுக்கு ஏற்றது அல்ல. தொய்வானதாக இருந்தால் அது பெண்களுக்கு ஏற்ற உடை தான்.

இந்த நபிமொழிகளைப் படித்த பின்பாவது மெல்லிய, இறுக்கமான ஆடை அணியக் கூடிய எமது சகோதரிகள் தங்களைத் திருத்திக் கொள்ளவேண்டும்.எனவே இஸ்லாம் கூறும் இந்த இனிய ஹிஜாப் முறையை நடைமுறைப்படுத்தி இந்த உலக தீமைகளிலிருந்தும் அந்த கடுமையான நரக நெருப்பிலிருந்தும் நம்மை காத்துக் கொள்வோமாக!! 

சகோதரி. சபீனா, ஃபிரான்ஸ்

ஏசு கூறும் இறைவன் -பைபிள் இருந்து


கர்த்தரும் தேவனுமாகிய அல்லாஹ் ஒருவனே!
(பைபிள் போதிக்கும் ஏகத்துவம்)
ஏசுவை தேவ குமாரான கருத்த சகோதர, சகோதரிகளே உங்கள் எண்ணங்கள் தவறானவையாக இருக்கின்றன இதை நாம் கூறவில்லை மாறாக பைபிள் கூறுகிறது. வாருங்கள் உங்கள் தேவனு வார்த்தைகளை கேட்போம்!
நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை. (ஏசாயா 45:5)
இந்த வசனத்தை சற்று உற்று நோக்குங்கள்! இங்கு கர்த்தராகிய தேவன் (அல்லாஹ்) தன்னைப் பற்றி கூறுகிறார். அதாவது இந்த சர்வலோகத்தை சிருஷ்டித்து அதை பரிபாலித்து வரக்கூடிய இறைவன் தாம் தான் என்றும் கூறுகிறார். மேலும் என்னைத் தவிர தேவன் இல்லை என்று அவரே மெய்ப்ட கூறுகிறார் இதன் மூலம் தேவன் தனக்கு குமாரனை ஏற்படுத்தவில்லை என்பது ஊர்ஜிதமாகிறது.
சிந்தித்துப்பாருங்கள் தேவன் என்பவன்தான் படைக்க, காக்க, அழிக்க ஆற்றல் பெற்றிருப்பான் எனவே ஏசு என்ற தீர்க்க தரிசியை நீங்கள் தேவ குமாரனாக கருதினால் அவர் தேவனளவுக்கு இணையாக கருதப்படுவரல்லவா? அப்படி கருதுவது அந்த தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமான தில்லையா?
தேவன் தன்னுடைய மகிமையை பற்றி குறிப்பிடும் போது என்னைத்தவிர தேவன் இல்லை என்கிறார் ஆனால் கிருத்தவர் களாகிய நீங்களோ ஏசுவை தேவகுமாரன் என்று கூறி தேவனளவுக்கு உயர்த்தி தேவனுக்கு இணையாக ஆக்குகிறீர்கள்! இந்த செய்கையின் மூலம் கிருத்தவர்களாகிய நீ்ங்கள் தேவனுடைய வார்த்தைகளை குழி தோண்டி புதைக்கிறீர்களே! இது நியாயமா? சிந்திக்கமாட்டீர்களா?
தேவன் (அல்லாஹ்) மட்டும்தான் ரட்சிச்க ஆற்றல் பெற்றவர்
தேவன் தனக்கு மைந்தனை ஏற்படுத்திக்கொண்டான் என்று அபாண்டமாக பொய்யை இட்டுக்கட்டுகிறீர்களே நீ்ங்கள் கீழ்கண்ட இந்த வசனத்தை என்றைக்காவது உணர்ந்ததுண்டா?
உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். (ஏசாயா 54:5)
பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. (ஏசாயா 45:22)
இங்கு தேவனாகிய அல்லாஹ் தான் மட்டும்தான் மனிதர்களை இரட்சிப்பதாக சூளுரைக்கிறான் ஆனால் நீங்களோ இந்த தேவனுடைய வார்த்தைகளை புறம்தள்ளிவிட்டு ஏசு ரட்சிப்பார் என்று கூறுகிறீர்களே இது தேவனுக்கு செய்யக்கூடிய தேவ துரோகமில்லையா! மீண்டும் நினைத்துப்பாருங்கள் நானே தேவன், வேறொருவரும் இல்லை என்று தேவனாகிய அல்லாஹ் கூறுகிறான்! மேலும் கீழ்கண்டவாறும் தேவன் கூறுகிறான்
முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. (ஏசாயா 46:9)
இங்கு தேவன் தனக்க சமமானவன் யாருமில்லை என்று தெளிவுபட கூறுகிறான் ஆனால் நீ்ங்களோ ஏசுவை தேவ குமாரன் என்று கூறி தேவ வார்த்தைகளை உதாசீனப்படுத்துகிறீர்கள்! தயவு செய்து ஏசுவை தேவகுமாரனாக கருதாதீர்கள் மாறாக அவரை தேவனுடைய உண்மையான ஊழியானாக தீர்க்கதரிசியாக கருதுங்கள்!
மேலும் தேவனாகிய அல்லாஹ் கோபக்காரனாக இருக்கிற படியால் ஏசு என்ற தீர்க்கதரிசியை தேவனளவுக்கு உயர்த்தி அவரை தேவனுக்கு இணையாக்கி பாவாத்தை சம்பாதிக்காதீர்கள் இதோ உங்கள் தேவன் கீழ்கண்டவாறு எச்சரிக்கிறான்!
கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள். (எரேமியா 10:10)
மேலும் தேவனாகிய அல்லாஹ் தன்னை மெய்யான தெய்வனம் என்றும் ஜீவனுள்ள தேவன் என்றும் நித்திய ராஜா என்றும் கூறுகிறான் ஆகவே என்றைக்கோ மறிக்கப் போகும் ஏசு என்ற தீர்க்கதரிசி எவ்வாறு தேவனுடைய குமாரர் ஆவார். தேவனுடைய குமாரர் என்று கூறுவதாக இருந்தால் அவர் தேவனைப் போன்று நித்திய குமாரராக இருந்திருக்க வேண்டுமே ஆனால் அவரோ என்றைக்கோ ஒருநாள் மரணிப்பவராக இருக்கிறாரே அவர் எவ்வாறு தேவ குமாரன் ஆவார்.
தேவனுக்கு குழந்தை தேவையில்லை குர்ஆன் ஆதாரம்
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.(ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்) – அல்குர்ஆன்)
ஏசு என்ற தீர்க்கதரிசி தேவனுடைய குமாரர் இல்லை என்ற ஆதாரங்களை பைபிள் மற்றும் குர்ஆன் வசனங்கள் மூலமாக நிறுபித்துவிட்டோம் இனி உங்களில் யாராவது ஏசுவை தேவகுமாரன் என்று கூறினால் அதற்கு அந்த தேவனாகிய அல்லாஹ்வே மறுமை நாளில் உங்களுக்கு பதிலளிப்பான்!
(எங்கள் இறைவா! இதோ உன்னுடைய அடிமையாகிய நாம் உண்மையை உறைத்துவிட்டோம்! இதற்கு நீயே சாட்சி! மறுமையில் எங்களை குற்றம் பிடிக்காதிருப்பாயாக!)
குறிப்பு -
இந்த செய்தியை சகோதரர் நேசகுமாருக்கும், உமர் என்ற புனைப்பெயர் கொண்ட கிருத்தவ சகோதரருக்கும் மற்றும் கேடுகெட்டத்தனமாக இஸ்லாத்தை விமர்சிக்கும் உங்கள் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் அறிவித்து விடுங்கள்! அவர்களுக்கும் இஸ்லாத்தின் அழைப்பை இங்கிருந்தே விடுகிறோம்! இதே தேவனாகிய அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்!
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்குர்ஆன் 3:85)

சிலையா?சிலுவையா?


கிருத்தவ பந்துக்களே! ரத்த பந்தங்களே சிலை வணக்கம் பைபிள் வேதத்தில் தடைசெய்யப்பட்டுள்ளதே? உணரமாட்டீர்களா?
சிலை

சற்று இறைவனின் வார்த்தைகளைக் கேளுங்கள்.
உங்கள் இறைவன் எதை வேண்டாம் என்று கட்டளையிடுகிறானோ அதைத்தானே தாங்கள் பின்பற்றுகிறீர்கள். சிலை வணக்கம் கூடாது என்று தன் வேதாகமத்தில் குறிப்பிடும் இறைவனுக்கு மாற்றமாக ஏசுநாதரையும், மரியாளையும், சிலுவையையும், இன்னும் மனிதர்களில் சிலர் சிலரையும் கல்லாக வழிபடுகிறீர்களே இது நியாயமா? உங்கள் வேதத்திலேயே உங்கள் இறைவன்

ஏசாயா 44:9 (Isaiah 44:6,9-20)9.

விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள்.4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. 

சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)

 3. அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
  
5. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.

6. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.

7. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கி றார்கள்.

அன்புள்ள என் அருமைச் சகோதரர்களே நீங்கள் முதலில் சிலை வணக்கங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் உங்களால் உங்கள் ஜீவனை நஷ்டப்படுத்தாதீர்கள் இதை நாம் சொல்லவில்லை பைபிள் சொல்கிறது.

 

மாற்கு 8:36,37 (Mark 8:36,37)


36. மனுஷன் உலகம் முழுவதையும் தாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப் படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

37. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை!

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன் திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார். 

ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.

சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு "பெண்கள் பகுதி" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன். செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!

சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.

மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள். 

"சவுகரியமா? இதன் மூலமா?" என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.

எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.

நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது. 

மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த "பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்" இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர். ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த 'மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்' என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.

சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.

என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, "கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!" என்றார். 

நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: "எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?"

அதற்கு அவர், "நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!" என்றார்.

"முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்" என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 

என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.

"இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?" பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.

"இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி...!" என்றார்.

அத்துடன் நில்லாமல், "இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?" என்றார்.

அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், "புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?" என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.

என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.

"உங்களுக்குத் தெரியுமா?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். "மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!" என்றார்.

"கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்" என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.

பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.

என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், "தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக"க் குறிப்பிட்டார். "சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!" என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.

வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?

அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.

இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.

அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.

அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.

அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்."நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?" என்று கேட்டு விட்டேன். 

நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: "இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது" என்றார்.

என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:

"செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?" என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.

இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள். அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, "கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?" என்று பெருமையாகக் கூறியதே விடையாகக் கிடைத்தது.

எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.

மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே 'அடிமைத்தனம்' என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் 'பெண்ணடிமை'த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.

ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.

என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?

பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,

இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!

சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்!



- தமிழாக்கம்: அபூ ஸாலிக்

facebook- ல் விபரங்களை திருடும் பாலியல் தளங்கள்



நீங்கள் வலையில் மேய்ந்து கொண்டிருக்கும் போது பாலியல் டேட்டின் தளத்தில் அல்லது அதன் விளம்பரத்தில் உங்களது புகைப்படத்தைப் பார்த்தால் எப்படி இருக்கும். நீ என்ன லூசா ? என்று என்னைப் பார்த்து நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் இதை மறுக்க முடியாத உண்மை. பேஸ்புக்கில் இருந்து இதுவரை 250,000 உறுப்பினர்களின் விவரங்களை டேட்டிங்க தளங்கள் திருடி உள்ள செய்தி வெளியாகி உள்ளது.
லவ்லி பேசஸ் என்னும் இணையதளம் சமீபத்தில் வெளியானது. இதில் இப்படியாக பேஸ்புக் பக்கங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கானோரின் விவரங்களைத் திருடி வெளியிட்டு இருந்தனர்.இதனை பேஸ்புக் நிறுவனத்தால் தடுக்கவே முடியாது என்பது இன்னொரு வேடிக்கையான விசயமாகும்.
” உறுப்பினர்களின் விவரங்களைத் திருடுவது எமதுக் கொள்கைகளின் மீறலாலும் ” என பேஸ்புக்கின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான பேரி சச்னிட் கூறினார். இவ்வாறு அத்துமீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இருந்தாலும் இப்படி இணையத்தில் இருந்து உறுப்பினர்களின் விவரங்களை சுடுபவர்களை முற்றாக ஒன்றும் செய்ய முடியாத நிலையே உண்மையாக இருக்கிறது. காரணம் இவ்விவரங்கள் அனைத்தும் எதோ ஒருவகையில் பொது உடைமையாக இருப்பதே !
இன்னொரு வேடிக்கையான சங்கதி என்னவென்றால், பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் 2003-களில் ஹார்வார்ட்டில் படித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் பள்ளியில் தனது தோழர்களின் புகைப்படங்களை பள்ளி சேர்வரில் பகிரவும், அதனை அனைவரும் பார்க்கக் கூடிய பேஸ்மாஹ் என்னும் நுட்பத்தைப் புகுத்தினார். அது பின்னர், பள்ளியில் இருக்கும் அனைத்து ஆண்/பெண் புகைப்படங்களை உருவி வெளியிட்டு அதில் எது சிறந்தது என மதிப்பீடு போடும் தளமாக மாறியது, பிற்காலத்தில் அதுதான் பேஸ்புக்காக உருமாறி வந்தது.
இப்போது சொல்லுங்கள் ! பேஸ்புக்கில் இருந்து திருடுபவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்ல இந்த சம்பவங்கள் போதாதா ?
” மார்க் உன்னிடம் இருந்து தான் இதைக் ( திருட்டைக் ) கற்றுக் கொண்டோம் ” என்பார்கள்.
பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களும், அல்லது உங்களது வயதுநிரம்பாத பிள்ளைகள் கணக்கு வைத்திருந்தாலும், கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. பின்னாளில் வரன் தேடும் தளங்களில் மட்டுமில்லாமல் டேட்டிங்க் தளங்களிலும் உங்கள் புகைப்படங்கள் வரலாம்.

வட்டி இல்லாத திட்டத்தை நோக்கி....

வட்டியின் கோரப்பிடியிலும் பொருளாதாரச் சுரண்டலிலும் சிக்கத் தவித்த அரபு மக்களுக்கு 1400 வருடங்களுக்கு முன்னரே விடுதலை வழங்கியது இஸ்லாம்.
‘வட்டியை என்னுடைய காலடியில் மிதிக்கிறேன்! கொடுத்த தொகைக்கு அதிகமாக எதையும் இனிமேல் பெறக் கூடாது!’ என்ற நபி (ஸல்) அவர்களின் வீர முழக்கம் அன்றைய ஏழைகளுக்கு மறுவாழ்வு தந்தது.
வட்டியின் இறுதி முடிவு கஷ்டத்தில்தான் முடியும்! வட்டிப் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் பரகத் ‘அபிவிருத்தி’ இருக்காது! வட்டி வாங்குபவனும் கொடுப்பவனும் கணக்கெழுதுபவனும் அதற்காக சாட்சி சொல்பவர்களும் அல்லாஹ்வின் சாபத்திற்குரியோர்! அந்த சாபத்தில் அனைவரும் சமமானவர்கள்! என்றெல்லாம் மார்க்கம் எச்சரிக்கிறது.
வட்டி வாங்குவது அல்லாஹ்வுடன் தொடுக்கும் போர் என்று கூட அல்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கிறது.
வட்டியை நோக்கிச் செல்பவன் தன்னை அழித் தொழிக்கும் பாதாளப் படுகுழியை நோக்கி அடியெடுத்து வைக்கின்றான். அவனை அழிவிலிருந்து காப்பாற்றுவதற் காகதான் அல்லாஹ்வும் அவனது தூதரும் எச்சரிக்கின் றார்களே தவிர இவன் வட்டி வாங்குவதாலோ கொடுப்பதாலோ அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எந்தப் பாதிப்பும் வந்துவிடப் போவதில்லை.
வாழ்வின் எதார்த்தத்தை மறந்து வாழும் மனிதன் ஆடம்பர வாழ்க்கையை ஏறெடுத்துப் பார்க்கிறான். போலிக் கவர்ச்சிகள் உள்ளத்தை கொள்ளை கொள்ள, தன் தகுதிக்கு மீறிய முடிவெடுத்துக் கொண்டு கல்லா வைப் பார்க்கிறான் காலியாக உள்ளது. வீடு தேடிவந்து வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் நினைவுக்கு வரவே, சில மணித்துளிகளில் பைனான்ஸ் கம்பெனி, பேங்க், அடமானக் கடை, கந்து வட்டி ஆகியோரின் வாசலில் தன்னை அடமானம் வைக்கிறான். அவன் வைப்பது அடமானம் மட்டுமல்ல. அவன் மானத்தையும்தான்!
யூதர்களால் விரிக்கப்பட்ட வட்டி என்ற மோக வலையிலும் பெண்களின் காமவலையிலும் அன்றைய பாலஸ்தீனியர்கள் சிக்கிக் கொண்டனர். இன்று அவர்களின் வாரிசுகள் சொந்த நாட்டிலேயே யூதர்களுக்கு அடிமையாகி, மறு வாழ்வுக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
உலகப் பொருளாதார நிர்ணயப் புருஷனாக பீற்றிக் கொண்ட அமெரிக்கா, வட்டி வங்கிகளின் சரிவால் பிற நாடுகளிடம் பிச்சை எடுத்ததையும், வட்டி வங்கி களின் ஒத்துழைப்புடன் போலி ஆடம்பரங்களையும் அனாச்சாரங்களையும் அரங்கேற்றி வந்த துபை பிறரிடம் யாசகம் கேட்டு நின்றதையும் கண்ட பிறகும் கூட வட்டி மோகம் குறைய வேண்டாமா?
ஒரு நாட்டின் அரசாங்கமே வட்டியின் விளைவை விட்டும் தம்மை காத்துக் கொள்ள முடியாதபோது, ஒரு குடிமகனால் மட்டும் எப்படி தங்களைக் காத்துக் கொள்ள முடியும்? சிந்திக்க வேண்டாமா?
தன் ஆரம்பர வாழ்க்கைக்காக கணவனுக்குத் தெரியாமல் வட்டி வாங்கியதால் பிறரிடம் தங்கள் சொத்தை மட்டுமல்ல, தங்கள் கற்பையும் இழந்த பெண்கள் எத்தனை பேர்! ஏன் இந்த அவல நிலை!
ஊர் நிசப்தாக இருக்கும் மதிய வேளையில் பெண்கள் தனித்திருக்கும் வீட்டுக்குள் வட்டி வசூல் என்ற பெயரில் வட்டிக் கயவர்கள் நுழைவதற்கு காரணமாக இருப்பது எது?
முஸ்லிம் சமூக கட்டமைப்பையும் கண்ணியத்தையும் காப்பாற்றுவதில் பொருளாதாரத்திற்கு மகத்தான பங்குண்டு! இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக ஜகாத் இடம் பெற்றிருப்பதும் இதனால்தான்! எனவே இஸ்லாமிய நிதியகம் ‘பைத்துல்மால்’ என்பது இஸ்லாத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இஸ்லாமிய அரசுத்துறைகளில் நபி (ஸல்) அவர்களின் காலம் முதல் இன்றுவரை அது தனி இலாகாவாக இயங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை சென்ற செப்டம்பர் இதழ் ‘சமுதாய ஒற்றுமை’யில் — தனிக் கட்டுரையாக பதிவு செய்திருந்தோம்.
பைத்துல்மால் என்பது இரண்டு முக்கியப் பிரிவுகளை கொண்டதாக செயல்பட்டு வந்திருக்கிறது.
1) கடமையான ஜகாத்தை வசூலித்து அத்தவ்பா அத்தி யாயத்தின் 60 வது வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் எட்டு வகையினருக்கும் முறையாக வழங்குவதற்கான பிரிவு. இதனை ‘பைத்துஸ் ஸகாத்’ ஜகாத் நிதியகம் என்று அழைக்கப்படுகிறது.
2) பொதுவான தான தர்மங்களைப் பெற்று, இஸ் லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் பொது மக்களுக்கும் தேவையான காரியங்களை நிறைவேற்றுவதற்கான பொது நிதியகம் பைத்துல் மால்.
இந்த இருவகை திட்டங்களை இணைத்ததாகவே இஸ்லாமிய ஆட்சியின் கீழ் ‘பைத்துல்மால்’ இயங்கி வந்தன.
இஸ்லாமிய ஆட்சி இல்லாத காரணத்தால் ‘பைத்துல்மால்’ என்பது தேவையற்றது என்று கருதிவிட முடியாது. ஜகாத் கடமையோ, பொதுப் பணியோ இஸ்லாமிய ஆட்சியால் உருவானதல்ல. அவை மார்க்கக் கடமையாகும். எனவே அந்தக் கடமையை முறையாக நிறைவேற்றுவதற்காக இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வது அவசியத் தேவையாகும்.
அல்லாஹ்வின் பெருங்கருணையால் தன்னார்வம் மிக்க இஸ்லாமிய சேவகர்களும் இஸ்லாமிய இயக்கங்களும் நிறுவனங்களும் தம்மால் இயன்ற அளவு ‘பைத்துல்மால்’ சேவையாற்றிவருகிறார்கள். அவர்களின் பணி சிறக்க அல்லாஹ்விடம் துஆச் செய்வோமாக!
பைத்துல்மால் பணியை தமிழகத்தில் விரிவுபடுத்திட பல சிந்தனையாளர்களும் செல்வந்தர்களும் அரும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஹல்லாக்களின் பள்ளிவாயில்தோறும் பைத்துல்மால்களை ஏற்படுத்தி அந்தந்த முஹல்லாவைச் சார்ந்தவர்களை வட்டிக் கொடுமையிலிருந்து மக்களைகாப்பாற்றிடவும் அந்த மக்களுக்கு அவசியத்தைச் தேவைகளில் பங்காற்றிடவும் சமூக கண்ணியம் காத்திடவும் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
சமுதாய ஒற்றுமை இதழுக்காக சில நல்லுள்ளங்களைச் சென்று சந்தித்தபோது நம்மை பரிவாக வரவேற்று கருத்துக்களை இதமாகப் பரிமாறிக் கொண்டனர்.
பைத்துல்மால் தொடர்பான திட்டங்களையும் செயல்பாடுகளையும் அவர்களின் அனுபவங்களையும் இங்கே பதிய வைத்துள்ளனர். நீங்களும் உங்கள் பகுதியில் வட்டியை எதிர்த்து பயணிக்க வேண்டும், சமூகத் தொண்டில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேராசையுடன் பேட்டிகளை தங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.
ஒவ்வொருவரின் செயல்பாடுகளிலும் சில சிறப்பம்சங்கள் இருக்கலாம். அவைகளை சேகரித்து மிகவும் சிறப்பாக நீங்கள் செயல்பட வேண்டும் என்பதே நமது ஆசை.
பைத்துஸ் ஸகாத்தையும் பைத்துல்மாலையும் மிகவும் கவனமாக பிரித்து தங்களின் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் மார்க்க அறிஞரின் ஆலோசனைகளுடன் உங்கள் பணிகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அல்லாஹ்வின் திருப் பொறுத்தத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு, அல்குர்ஆன் மற்றும் சுன்னாவிற்கு கட்டுப்பட்டு நம் நடவடிக்கைகள் அனைத்தும் அமைய வேண்டும் என்றும் நினைவூட்டிக் கொள்கிறேன். வாருங்கள் பைத்துல்மால்களுக்குச் செல்வோமா?
“அழகிய கடன் அறக்கட்டளை”
இந்திய முஸ்லிம்கள் வங்கிகளில் வேண்டாம் என்று நிராகரித்த வட்டிப் பணம் கடந்த 2005 இல் மட்டும் ரூபாய் 75000 கோடியாகும். (தகவல்:RBI Legal News and Views) இந்தத் தொகை வட்டியில்லா கடன் திட்டத்திற்கு பயன்பட்டிருந்தால் ஏற்பட்டிருக்கும் நல்ல நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்!
இறையச்சத்துடனும் உண்மையான சமுதாய அக்கறையுடனும் பணியாற்றக் கூடிய ஓரிருவர் இருந்தாலே போதும். வட்டியில்லா அழகிய கடனுதவித் திட்டத்தை துவங்கலாம். கடந்த 15 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பைத்துல்மால் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
நகைகளின் பேரில் மட்டும் கடன் கொடுப்பதால் கடனுக்கு முழுமையான உத்திரவாதம் கிடைக்கிறது. இதுவரை சுமார் 1500 நபர்கள் பயனடைந்துள்ளனர். சென்னை வாசிகளுக்கு மட்டும்தான் என்று வரையறை விதிக்கவில்லை. யாரும் பயன் அடையலாம். சிறுவியாபாரிகளிடம் தினமும் பத்து ரூபாய் வசூலித்தால் கூட வருடத்திற்கு ரூபாய் 3600 கிடைத்துவிடும். பைத்துல்மாலை துவங்க இதுபோன்ற எத்தனையோ எளிய வழிகள் உள்ளன. பள்ளிவாசல்களின் சேமிப்புத் தொகைகளைக் கூட பைத்துல்மாலுக்கு பயன்படுத்தலாம். அதன் நிர்வாகிகளாக பள்ளிவாசல் இமாம்களையே நியமிக்கலாம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை வட்டார ஜமாஅத்துல் உலமா கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் திருவிடைச்சேரி சோகச் சம்பவத்தைப் பற்றி விவாதிக்கப்பட்டது. பிறகு பைத்துல்மால் மற்றும் ஷரீஅத் கவுன்சில் பற்றி விவரித்தேன். அதில் பங்கேற்ற 120 உலமாக்களில் 40 இமாம்கள் தங்கள் முஹல்லாக்களில் பைத்துல்மால் சேவை துவங்க ஆயத்தமாகிவிட்டார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.
பைத்துல்மால் தொடர்பான ஆலோசனைகள் வழங்க அழகிய கடன் அறக்கட்டளை தயாராக உள்ளது.
அழகிய கடன் அறக்கட்டளை, மக்கா மஸ்ஜித் வளாகம், 822, அண்ணா சாலை, சென்னை -2
தொலைபேசி: 044-42141333, email: azhagiyakadan@makkamasjid.com
“ஒரு வருட கால தவணையில் கடன்!- JAQH மதுரை”
மௌலவி. அப்துல்காதர் உமரி, சகோ. பாவாஷா மற்றும் சகோ. ரஃபீக் ஆகியோரால் தலா ரூபாய் 5000 வழங்கி ரூபாய் 15000 ஆயிரத்தைக் கொண்டு சிறிய அளவில், சேவை மனப்பான்மையுடனும் 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் மதுரையில் சேவையாற்றிவரும் (ஜாக்) பைத்துல்மால். அல்லாஹ்வின் பெருங்கருணையால் இன்று 8 இலட்சம் ரூபாயை முதலீடாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.
நகை அடமானக் கடனாக அதிக பட்சமாக ரூபாய் 20000 வரை வழங்கப்படுகிறது. கடனை திருப்பித் தர ஒரு வருட காலம் தவணை வழங்குவதுதான் இந்த பைத்துல்மாலின் சிறப்பம்சம்.
நகைக்கான மதிப்பீடு செய்து அதில் 60% வரை கடன் வழங்கப்படுகிறது. நகைகளை பாதுகாப்பதற் கான லாக்கர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
கல்வி, மருத்துவம், குடும்பச் செலவு மற்றும் அவசரக் கடன் தீர்ப்பது போன்ற காரியங்களுக்காக நகையை அடமானமாகப் பெற்று கொண்டு கடன் வழங்கப்படுகிறது.
பைத்துல்மால் என்பது பணம் தொடர்புடைய சேவையாக இருப்பதால் அதனை தனி மனிதர்களால் நடத்துவதை விட ஒரு இயக்கத்தின் தொடர்புடன் செயலாற்றுவதே பல வகைகளில் சிறந்தது என்பது அதன் நிர்வாகிகளின் கருத்து.
மூன்று நபர்களை நிர்வாகிகளாகவும் ஏழு நபர்களை ஆலோசனைக் கமிட்டி உறுப்பி னராகவும் கொண்டு செயல்பட்டு வருகிறது. கணக்குகள் முறையாக ஆடிட் (தணிக்கை) செய்யப்பட்டு மக்கள் பார் வைக்கு வைக்கப்படுகின்றன.
பைத்துல்மால் பெயரிலேயே வங்கி கணக்கு துவங்கி, வினியோகம் அனைத்தும் வங்கிக் காசோலை மூலமே தரப்படுகிறது.
கடனுக்கு பகரமாக நகை தரமுடியாதவர்கள் மதுரை ஜாக் நிர்வாகத்தின் கீழ் செயலாற்றிவரும் பைத்துஸ் ஸகாத் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஜகாத் பெறத் தகுதியுடையவர்களாக இருந்தால் – பைத்துஸ் ஸகாத்தின் நிதி நிலைமையை அணுசரித்து – அவர்களுக்கான உதவிகள் ஜகாத் நிதியிலிருந்து தரப்படுகிறது.
இதுவரை 300 நபர்கள் பைத்துல்மாலால் பயனடைந்துள்ளார்கள். பதினைந்து இலட்சம் ரூபாய் வரை வருடாந்திரப் பரிவர்த்தனை நடக்கிறது. மதுரை மாவட்டத்தை சார்ந்தவர்களிடமும் பிறரிடமும் பைத்துல் மாலுக்காக நன்கொடை பெற்றாலும் மதுரை மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படுகிறது.
விண்ணப்ப்படிவத்திற்காக ரூபாய் 50 வசூலிக்கப்படுகிறது.
பைத்துல்மால் பணியாளர்கள், நிர்வாகிகள், நகையை மதிப்பீடு செய்பவர் ஆகிய அனைவரும் சேவை மனப்பான்மையுடன் இலவசமாகவே பணியாற்றுகின்றனர். ஜாக் மர்கஸ்தான் அதன் அலுவலகமாக செயல்படுவதால் ஸ்டேஷனரி செலவுகளைத் தவிர பைத்துல்மாலுக்கென எந்த செலவீனமும் இல்லை.
மதுரை, தெற்கு மாரட் வீதி, கதவு எண் 69ல் இயங்கி வரும் ஜாக் அலுவலகத்தில் பைத்துல் மால் செயல்பட்டுவருகிறது. மேலும் விபரங்களுக்கு, பைத்துல் மால் செயலாளர் பாவாஷாவை தொடர்பு கொள்ளலாம். (செல் 9865593233)
 
“திண்டுக்கலில் பைத்துல் மால்!”
சமூக சேவையாற்ற 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதே ‘திண்டுக்கல் அமானா வெல்ஃபேர் அசோசியேஸன் டிரஸ்ட்’ (Dindigul Amana Welfare Association Trust) Dawat வட்டியில்லா கடன் திட்டத்தை செயல்படுத்தியது. நகை அடமானத்தின் பேரில் ரூபாய் 15000 வரை அதிகபட்சம் நான்கு மாத தவணையில் கடன் வழங்கப்படுகிறது.
இதுவரை சுமார் 30 பேர் பயனடைந்துள்ளனர். அதுபோல் ஜகாத் மற்றும் சதகா வினியோகத்திற்காக பைத்துல்மால் துவங்கப்பட்டு கடந்த ஆண்டு இரண்டு இலட்சம் (200000) வரை வினியோகிக்கப்பட்டுள்ளது. சிறுதொழில், கல்வி, உடல் ஊனமுற்றோர் கடனுதவி, மருத்துவம், திருமணம், விதவைகளை ஆதரித்தல் போன்றவற்றிற்காக செலவிடப்பட்டு இதுவரை 75 பேர் பயனடைந்துள்ளார்கள்.
தொடர்புக்கு, இஸ்மாயில் காம்ப்ளக்ஸ், முதல்மாடி, 94, மதுரை ரோடு, பேகம்பூர், திண்டுக்கல் -2 தொலைபேசி: 94440 77200 Email: ismailsait@gmail.com, www.dawat.co.in
“திண்டுக்கலில் பைத்துல் மால்!”
சமூக சேவையாற்ற 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதே ‘திண்டுக்கல் அமானா வெல்ஃபேர் அசோசியேஸன் டிரஸ்ட்’ (Dindigul Amana Welfare Association Trust) Dawat வட்டியில்லா கடன் திட்டத்தை செயல்படுத்தியது. நகை அடமானத்தின் பேரில் ரூபாய் 15000 வரை அதிகபட்சம் நான்கு மாத தவணையில் கடன் வழங்கப்படுகிறது.
இதுவரை சுமார் 30 பேர் பயனடைந்துள்ளனர். அதுபோல் ஜகாத் மற்றும் சதகா வினியோகத்திற்காக பைத்துல்மால் துவங்கப்பட்டு கடந்த ஆண்டு இரண்டு இலட்சம் (200000) வரை வினியோகிக்கப்பட்டுள்ளது. சிறுதொழில், கல்வி, உடல் ஊனமுற்றோர் கடனுதவி, மருத்துவம், திருமணம், விதவைகளை ஆதரித்தல் போன்றவற்றிற்காக செலவிடப்பட்டு இதுவரை 75 பேர் பயனடைந்துள்ளார்கள்.
தொடர்புக்கு, இஸ்மாயில் காம்ப்ளக்ஸ், முதல்மாடி, 94, மதுரை ரோடு, பேகம்பூர், திண்டுக்கல் -2 தொலைபேசி: 94440 77200 Email: ismailsait@gmail.com, www.dawat.co.in

“பள்ளிவாசல்கள் தோறும் பைத்துல்மால் வேண்டும்”
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஜகாத்தும் முக்கிய இடம்வகிக்கிறது. ‘நீங்கள் அவர்களில் பொருளில் இருந்து (ஜகாத்தை) எடுங்கள்!’ (அல்குர்ஆன் 9:103) என்ற அல்லாஹ்வின் கட்டளையும் ஜகாத்தை வசூலிப்பதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான ஊதியமும் ஜகாத் நிதியிலிருந்தே வழங்கலாம் என்ற அல்குர்ஆனின் (9:60) பங்கீட்டி முறையும் இது அரசு துறை சார்ந்த பொறுப்பு என்பதை தெளிவு படுத்துகிறது.
யமன் தேசத்திற்கு ஆளுனராக அனுப்பி வைக்கப்பட்ட முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்க ளுக்கு ‘நீங்கள் அம்மக்களில் செல்வந்தர்களிட மிருந்து ஜகாத்தை வசூலித்து, அம்மக்களின் ஏழைகளுக்கு வினியோகிக்க வேண்டும் என்றும் வசூலகர்கள் மக்களின் உயர்ந்த ரக பொருட்களை ஜகாத்திற்காக எடுக்கக் கூடாது’ என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தி வழியனுப்பி வைத்தது ஜகாத் என்பது அரசு அதிகார கட்டமைப்பின் கீழ் இயங்க வேண்டிய துறை என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் மீது ஜகாத் வழங்கும் கடமையுடன் மற்றொரு பொறுப்பும் அதிகமாகி றது. முஸ்லிம் சமூக கட்டமைப்புடன் இயங்கிவரும் முஹல்லா ஜமாஅத்களை ஜகாத் வினியோகச் செயல் வீரர்களாக உருவாக்குவதுதான் அந்தப் பொறுப்பு!
தொழுகையை நிலைநாட்டுங்கள்! நோன்பைக் கடைபிடியுங்கள்! என்ற அல்லாஹ்வின் கட்ட ளைகளை நிறைவேற்றுவதற்காக பள்ளிவாசல் நிர்வாகிகள் பாடுபடுகிறார்கள். பள்ளிவாயில் களை நிர்வகிக்க இமாம் மற்றும் முஅத்தின் ஆகியோருக்கு ஊதியம் வழங்குகிறார்கள். நோன்பாளிகளுக்கு நோன்பு துறக்க உரிய ஏற்பாடுகளை செய்கிறார்கள். ஆனால் தொழுகையுடன் அல்லாஹ் இணைத்தே கூறும் ‘ஜகாத்தை கொடுங்கள்’ என்ற கடமையிலிருந்து அந்நியமாகி நிற்கின்றார்கள். தொழுகைக் கடமையையும் ஜகாத் கடமையையும் பிரித்துப் பார்ப்பவர்களுடன் நான் போரிடுவேன் என அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது இங்கே நினைவு கூரத்தக்கது.
ஒருவன் தனக்கு சொந்தமில்லாத செல்வத்தை தர்மம் செய்யமுடியாது. ஜகாத் என்பது ஜகாத் கொடுப்பவருக்கு சொந்தமில்லாத செல்வமாகும். அதனை பைத்துல்மாலுக்கு வழங்குவதே அவருடைய கடமை. பைத்துல்மால்தான் அதனை முறையாக வினியோகிக்க வேண்டும்.
தனி நபர்கள் தனித்தனியாக ஜகாத்தை வினியோகிப்பதால் ஏற்படும் சமூக பாதிப்புகள்
உண்மையான ஏழைகளுக்கு ஜகாத் சென்றடையாத நிலை.
ஜகாத் பெற தகுதியற்ற பலர் தங்களது யாசகம் கேட்கும் பழக்கத்தை பயன்படுத்தி ஜகாத்தை சுருட்டிக் கொள்ளும் நிலை.
யாசகத்தை ஒழிக்க வந்தது ஜகாத். அதை வீட்டு வாசலிலும் கடைகளிலும் வழங்கப்படுவதால் யாசகர்கள் உருவாக காரணமாகி விடுகிறது.
இதனால் முஸ்லிம் சமுதாய ஏழைகளின் தன்மானம் பாதிக்கப்படுகிறது.
ஜகாத் கொடுப்பவரின் தவறுகளை சுட்டிக் காண்பிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
தனிநபராக ஜகாத் கொடுத்துக் கொண்டிருப்பவர் கள் தங்களது ஜகாத்தை பைத்துல்மாலில் ஒப்படைப்பதுடன், அவர்களால் ஜகாத் கொடுக்கப்பட்டு வந்த ஏழைகளின் பட்டியலையும் பைத்துல்மாலுக்கு வழங்கினால் ஜகாத் வினியோகம் மேலும் முறைப்படுத்தப்பட வசதியாக அமையும்.
பள்ளிவாசல் ஜமாஅத்களில் பைத்துல்மால் அமைக்கும் முறையும் செயல் திட்டங்களும்
நாம் கடந்த மூன்று வருடங்களாக 100க்கும் அதிகமான பைத்துல்மால்களை பள்ளிவாசல் நிர்வாகத்தின் மூலம் ஏற்படுத்தியுள்ளோம். அதற்காக நாம் வகுத்துக் கொண்ட நெறிகள்:
1) பள்ளிவாசல் நிர்வாகிகளில் ஓரிருவர்
2) பள்ளிவாசலின் நிர்வாகப் பொறுப்பில் இல்லாத சுமார் 10 நபர்கள்
3) ஒரு ஆலிம் (மார்க்க அறிஞர்)
ஆகிய மூன்று வகையினரைக் கொண்டு, ஏதாவது ஒரு பெயரில் பைத்துல்மால் நிர்வாகம் அமைக்கப்படுகிறது.
அது பள்ளிவாசல் சார்பாக தனிக் கிளையாகச் செயல்படலாம், அல்லது அதற்காக புதிய டிரஸ்ட் ஒன்றை ஏற்படுத்தலாம். அல்லது சொஸைட்டி ஆக்ட்டின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம். பைத்துல்மால் நிர்வாகம் ரூபாய் 50000 (ஐம்பதாயிரம்) பைத்துல் மாலுக்காக வசூல் செய்து அதனைக் கொண்டு தன் சேவையை துவங்க வேண்டும். அதற்கான வருடாந்திரக் கணக்கை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் பள்ளிவாசலில் ஜகாத் வசூலித்து முறையாக வினி யோகிக்கும் பைத்துல்மால் உள்ளது என்ற போர்டு பள்ளிவாசலில் தொங்கவிடப்படவேண்டும். ஏழைகளுக்கு கல்வி உதவி செய்தல். முதியோர், திக்கற்றோர், வழிப்போக்கர், விதவை ஆகியோருக்கு மாதாந்திர உதவி (பென்ஷன்) வழங்குதல். ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தல் போன்ற பொதுக் காரியங்களில் அந்தந்த ஊருக்கு எது மிக அவசியமானதோ அதிலிருந்து பைத்துல்மால் தனது பணியைத் துவங்கலாம்.
மாதாந்திர உதவிக்குரிய தொகையைத் தவிர வேறு எந்தத் தொகையையும் பைத்துல்மால் தனது கையிருப்புத் தொகையாக வைத்துக்கொள்ளக் கூடாது. ஜகாத் தொகை வந்துவிட்டால் மிகக் குறுகிய தவணைக்குள் பரிசீலித்து உரியவர்களிடம் விரைவாக கொண்டு சேர்த்திட வேண்டும்.
இவ்வாறான கட்டமைப்பில் இயங்கி வரும் பைத்துல்மால் நிறுவனங்களுக்கு SEED (சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை) சார்பாக ரூபாய் 10000 வழங்குகிறோம். ஒவ்வொரு ஜமாஅத்தும் சுயமாக தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். அவைகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் கூட்டமைப்பு எதனையும் நாம் ஏற்படுத்தவில்லை.
வட்டியில்லா கடன் உதவித் திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல்
செல்வந்தர்களிடமிருந்து பொருளாதாரத்தை கடனாகவும் அன்பளிப்பாகவும் தொகையைப் பெற்றுக் கொண்டும், பள்ளிவாசலின் பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டும் வட்டியில்லா கடன் உதவித் திட்டத்தை பள்ளிவாசல் ஜமாஅத் துவங்கலாம். நகை அடமானத்தின் மூலமும் தனி நபர் பொறுப்பேற்றலின் அடிப்படையிலும் கடன் வழங்கலாம். இதன் மூலம் முஸ்லிம்களை வட்டிக் கொடுமையிலிருந்து பாதுகாக்க முடியும்.
திரும்பி தர முடியாத நிர்ப்பந்த சூழ்நிலைக்கு தள்ளப் படுபவர்களை ஜகாத் பெற தகுதி பெற்ற கடனாளியாக முடிவு செய்து அவர் தர வேண்டிய கடன் தொகையை ஜகாத் நிதியிலிருந்து பெறலாம்.
தேவை ஏற்படும் பட்சத்தில் கடன் உதவித் திட்டத்திற்காக தனி நிர்வாகத்தையே அமைத்துக் கொள்ளலாம். ஒரு முஹல்லாவில் பல தனித்தனி நிர்வாகத்தை ஏற்படுத்தி, பலரை நிர்வாகியாக தேர்வு செய்வதன் மூலம் பள்ளிவாசலின் நிர்வாகச் சண்டைகளைக் கூட இதன் மூலம் தவிர்க்கலாம்.
முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளால் பள்ளிவாசல் மட்டுமே நிர்வகிக்கப்படுவதால் அவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளாக மட்டுமே செயல்பட்டு வருகிறார்கள். ஜமாஅத் நிர்வாகிகளாக தங்களை மாற்றிக் கொள்ளவில்லை. தம் முஹல்லாவைச் சார்ந்த மக்களுக்கு இது போன்ற பொதுப்பணிகளைச் செய்ய முன்வரும்போதுதான் அவர்கள் ஜமாஅத் நிர்வாகிகளாக மாற முடியுமே தவிர அதுவரை இவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள் மட்டும்தான். எனவே ஜகாத் கடமையில் பாராமுகமாகி வாழ்ந்து வரும் ஜமாஅத் நிர்வாகிகள் அல்லாஹ்வின் விசாரணையை அஞ்சிக் கொள்ளட்டும்! தங்களின் முஹல்லாக்களில் பொதுநலப்பணிகளை துவங்கட்டும்!
பைத்துல்மால் பற்றிய ஆலோசனைக்கு ஜனாப் எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ், செல்: 98400 40067.
“சிறுசேமிப்புத் திட்டம் பைத்துல்மாலாகியது – த.மு.மு.க. விருதுநகர்”
2005ம் ஆண்டு அழகிய கடன் மற்றும் சிறுசேமிப்புத் திட்டம் என்ற பெயரில் ரூபாய் 10000 நன்கொடை யாகவும் ரூபாய் 10000 கடனாகப் பெற்றும் ஆக ரூபாய் 20000த்தை கொண்டு துவங்கப்பட்டதுதான் விருதுநகர் பைத்துல்மால். இதுவரை 1005 நபர்கள் பயனடைந்துள்ளார்கள். 30 இலட்சம் வரை பரிவர்த்தனம் செய்யப்பட்டுள்ளது.
சேமிப்புத் திட்டம்தான் விருதுநகர் பைத்துல்மாலின் முதுகெழும்பு! விருதுநகர் பைத்துல்மால் 100 நாள் சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது. குறைந்தது 20 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை தினமும் வசூலிக் கப்படுகிறது. இதில் ஏழைகள், சிறு வியாபாரிகள் மற்றும் செல்வந்தர்கள் அனைவரும் சேமித்து வருகின்றனர். ஹஜ் செய்ய நிய்யத் வைத்திருப்பவர்களும் இந்த பைத்துல்மாலில் தங்கள் தொகையை சேமித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரு மாத தவணை முதல் ஆறு மாத தவணை வரை தங்கள் தொகையை கடனுதவித் திட்டத்திற்காக பயன்படுத்திக் கொள்ள பைத்துல் மாலுக்கு கடனாக வழங்குவோர் உள்ளனர். சேமிப்பு திட்டத்தில் இணைவோரிடம் 10 ரூபாயும் கடன் திட்டத்தில் பயனடைய வருவோரிடம் 20 ரூபாயும் பெற்று, அந்தத் தொகையை ஸ்டேஷனரி செலவுக்கும் வசூலகர் சம்பளத்திற்கும் பயன்படுத்தப் படுகிறது. இவைதான் விருதுநகர் பைத்துல்மாலின் பணவரவுக்கான வழிகள். நகை அடமானம் பெற்று அதனை பாதுகாப்பது கடினம் என்பதால் எந்த அடமானங்களும் இல்லாமல் இரண்டு நபர்களின் சாட்சிகளின் அடிப் படையிலேயே கடன் வழங்கப்படுகிறது.
வட்டி வாங்காத சிறுவியாபாரிகள், மருத்துவம், கல்வி மற்றும் வரதட்சணை இல்லாத திருமணம் போன்றவற்றுக்கு கடன் வழங்கப்படுகிறது. அதிகத் தொகையாக ரூபாய் 5000 வரை கடன் வழங்கப்பட்டு, அதிக பட்சமாக 100 நாட்கள் தவணை தரப்படுகின்றன. கல்வி உதவிக்காக மட்டும் 150 நாட்கள் தவணை தரப்படுகிறது. தின சேமிப்பில் 200 நபர்கள் இணைந்துள்ளனர். அதில் 100 நபர்கள் வீடுகளில் இருந்து செலுத்துபவர்கள். 100 நபர்கள் கடைகளில் இருந்து செலுத்துபவர்கள். இவர்களிடம் தினமும் சென்று வசூலிப்பதற்காக ஒரு வசூலகர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாத ஊதியம் பைத்துல்மால் நிர்வாகம் வழங்குகிறது.
சிறுசேமிப்பாளர்கள் தங்கள் தொகைகளை எந்நேரத்தில் திரும்பக் கேட்டாலும் அதனை வீடு தேடிச் சென்று ஒப்படைப்பது மிகப் பெரும் வரவேற்பை பைத்துல்மாலுக்கு பெற்றுத் தந்துள்ளது. பைத்துல்மாலை விருதுநகர் தமுமுக சார்பில் 5 நபர்கள் சேவை மனப்பான்மையுடன் எவ்வித ஊதியமும் இன்றி நிர்வகித்து வருகிறார்கள்.
விருதுநகர் தமுமுக அலுவலகத்தில் ஞாயிறு தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரை பைத்துல்மாலின் பணிகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கீழ் பைத்துல்மால் இயங்குவதால் அவ்வப்போது இலவசமாக மருத்துவ உதவிகளும் வழிப்போக்கர்களுக்கான உதவிகளும் செய்த வகையில் இதுவரை ரூபாய் 25000 வரை வராக் கடனாக பைத்துல்மால் செலவிட்டுள்ளது. இதனை நன்கொடைகள் மூலமாகத் தான் நிவர்த்தி செய்யவேண்டியுள்ளது.
ஜகாத்தாக வசூலிக்கப்படும் தொகையை அதிகபட்சம் ஒன்றரை மாதத்திற்கும் ஜகாத் பெற தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் விநியோகித்துவிட்டு, அதற்கான கணக்குகள் ஜகாத் வழங்கியவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
தமுமுக மாவட்ட தலைமை அலுவலகம் பர்மா காலனி, விருதுநகர். தகவல்: அப்துல் ரஜாக் 9442056617
“38 வருட சேவையில் தமிழ்நாடு ஜமாஅத்தே இஸ்லாமியின் வாணியம்பாடி பைத்துல்மால்”
துவக்கம்: 1972, முதலீடு: 6500
வாணியம்பாடி இஸ்லாமிய பைத்துல்மால் ஒரு சிறு வங்கியின் கட்டமைப்பில் இயங்கி வருகிறது. ஐந்து கவுண்டர்களும் பாதுகாப்பு பெட்டக அறையும் நம்மை பிரமிக்க வைத்தது.
1. 1972ஆம் ஆண்டில் இஸ்லாமிய பைத்துல்மால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் 1974ஆம் ஆண்டு Act ofீ 1860 (சொஸைட்டி ஆக்ட்)ன் படி வேலூரில் பதிவு செய்யப்பட்டது. நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட 1972ல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இது 1997ல் மேலும் திருத்தம் செய்யப்பட்டு Income Tax 12கி ன் படி பதிவு செய்யப்பட்டது. இதன் கட்டமைப்பு கீழ் வருமாறு…
ஒரு தலைவர், இரு துணைத் தலைவர்கள்,
ஒரு பொதுச் செயலாளர், இரு துணைச் செயலாளர்கள், ஒரு இன்டர்னல் ஆடிட்டர், 15 நிறுவனர்கள் மற்றும் நிரந்தர உறுப்பினர்கள், அமைப்பாளர் குழுவின் 15 ஊழியர்கள்
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து பொறுப்பாளர்களையும் அமைப்பாளர் குழுவின் 15 ஊழியர்கள் உட்பட பொதுக் குழுவினர் தேர்ந்தெடுக்கின்றனர். பொதுக்குழு உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை 150 ஆகும்.
நோக்கம்
நகைகளை வைத்துக் கொண்டு வட்டியில்லாக் கடனை வழங்குவதே பைத்துல்மாலின் ஒரே நோக்கமாகும், தங்கம் வெள்ளி நகைகள் அடமான மூலம் மட்டுமே கடன் கடன் வழங்கப்படுகிறது.
அடமானமாக வரும் நகைகள் அங்கேயே சரிபார்க்கப்பட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது. வாணியம்பாடி பகுதியில் குடியிருப்பதற்கான சான்றுகளுடன் அவர்களின் மனுக்கள் உடனே பரிசீலிக்கப்படுகின்றன. நகைத் தொகையில் 75 சதவீதம் வரை கடன் வழங்கப்படுகிறது. மொத்தமாகவோ தவணை முறையிலோ திருப்பித் தரும் சலுகையும் வழங்கப்படுறது. இவ்வாறு தினமும் மாலை ஐந்து மணி முதல் இரவு ஏழரை மணி வரை இயங்கி வரும் பைத்துல்மாலில் 12 நபர்கள் பணியாற்றுகிறார்கள்.
அதில் 5 நபர்கள் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் சராசரி 80 நபர்கள் வருகை தருகிறார்கள். மாதம் ரூபாய் சுமார் 12 இலட்சம் வரை பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
2009 – 2010ம் கணக்கு ஆண்டில் மட்டும் ரூபாய் ஒரு கோடியே இருபத்தி ஒன்பது இலட்சத்து அறுபத்தி நான்காயிரம் (1,29,64000) பரிவர்த்தனை நடந்துள்ளது. அதில் 1634 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
1973 முதல் 2010 கணக்கு ஆண்டுவரை 72173 நபர்கள் பயனடைந்துள்ளார்கள். அதில் ஆறு கோடியே பதினோரு இலட்சத்து நாற்பத்தி எட்டாயிரத்து எண்ணூற்றி எண்பத்து ஏழு (6,11,48,887) ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளன.
2005ம் ஆண்டு முதல் சிறுதொழில் மேம்பாட்டு மையம் (Small Business development Centre) என்ற பிரிவு துவங்கப்பட்டு 2010 மார்ச் வரை முப்பத்தி இரண்டு இலட்சத்து எழுபத்தி மூன்றாயிரத்து ஐநூற்றி ஐம்பது (32,73,550) ரூபாய் பரிவர்த்தனை நடந்துள்ளது.
சிறு தொழில் வணிகர்களுக்காக கடன் வெறும் 5 லட்சம் முதலீட்டில் ஆரம்பித்து, பழ வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், சிறு கடைக்காரர்களுக்கு தினசரி 50 – 100 ரூபாய்களாக 100 நாட்களுக்குள் திரும் பச் செலுத்த வேண்டும் என்ற உறுதிமொழியுடன் 5 ஆயிரம் – 10 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது. இதற்காக Guarantor உடன் அவர்கள் 3 வருட அனுபவ முள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாகும். அதில் 451 சிறு தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர்.
மூன்று மாநிலங்களின் பைத்துல்மால் சேவை அமைப்புகளை இணைத்து Multi State Co – operative Society தேசிய பன்முக கூட்டுறவு சங்கத்தை உருவாக்கும் முயற்சியை மிகவும் துரிதமாக செய்து கொண்டிருக்கின்றனர். பீஹார், கேரளா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் சேவையாற்றிவரும் பைத்துல்மால்களின் அனுபவங்கள் மற்றும் ஆலோசனையுடன் இப்பணி நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பைத்துல்மாலின் பணிகள் விரிவடையவும் அரசின் ஒரே அனுமதியின் கீழ் பல பைத்துல்மால்கள் இயங்கவும் வாய்ப்பாக அமையும்.
ஜகாத் தொகைக்கான தனி கணக்கை ஏற்படுத்தியுள்ளனர். அதில் ஜகாத் மட்டுமே வரவு செலவு செய்யப்படுகிறது. ஜகாத்திற்கு தகுதியான 8 பிரிவினர்களுக்கு மட்டுமே பங்கீடு செய்யப்படுகிறது. பைத்துல்மால் கமிட்டியின் நிர்வாகக் குழு கூட்டம் மாதந்தோறும் நடைபெறும். அதில் உதவி கோரும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, உதவி பெறத் தகுதியுடையோர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
வெகுதொலைவில் வாழும் மக்கள் அங்கு வருவதற்கு சிரமமாக இருப்பதால் மற்றொரு பகுதியில் கலெக்ஷன் கேபின் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வசதி குறைவின் காரணமாக இந்நிறுவனம் இது அமைந்துள்ள இடத்தில் உள்ள மக்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருகிறது. சகோதர சமுதாய சகோதரர்களுக்கும் இதன் மூலம் பயன் கிட்டவில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயம்.
இது தவிர வருடாந்திர ஜகாத், சதகா (ஈகை) குர்பானி தோல் தொகை ஆகியவற்றைக் கொண்டு இங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை நோயாளிக ளுக்கு உதவித் தொகை Relief Work போன்ற பணிகள் நடக்கின்றன.
ஜகாத் தொகையிலிருந்து Self Help Group ஏற்படுத்தி, பூ வேலைப்பாடு, ஜரி, தையல், ஊறுகாய், அப்பளம் போன்ற சிறு தொழில்களுக்காகவும் தொகை வழங்கப்படுகிறது. ஜகாத் மற்றும் சதகா நகரிலுள்ள மக்களிடமிருந்தே வசூலிக்கப்படுகிறது.
சொத்து விவரம்
பைத்துல்மாலுக்காக 1978ல் 2000 சதுர அடி இடம் வாங்கப்பட்டு, அலுவலகம் அமைக்கப்பட்டது. இது தவிர நகரின் முக்கிய இடத்தில் 30 கடைகளைக் கொண்ட Shopping Complex உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் கிட்டத்தட்ட 4 லட்சமாகும். இந்த வருமானத்திலிருந்து ஊழி யர்களுக்கு சம்பளம், மின்சாரக் கட்டணம், இன்ஸ்யூரன்ஸ், வரி மற்றும் பிற செலவுகள் செய்யப்படுகின்றன.
பொது மக்கள் ஆதரவு
இஸ்லாமிய பைத்துல்மால் 1972ல் வெறும் ஆறரை ஆயிரம் முதலீட்டில் தொடங்கப்பட்டது. கடன் கொடுக்க அதிகபட்சத் தொகை தேவைப்படுமல்லவா? அதனால் பைத்துல்மால் பொது மக்களின் ஆதரவை வேண்டியது, இவ்வேண்டுகோளுக்கிணங்க ஏறத்தாழ 2500 நபர்கள் மற்றும் நிறுவனத்திற்கு மேலும் தேவையான நிதியினை 3 மாதத்திலிருந்து 3/5 வருடங்கள் வரை கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பைத்துல்மாலின் அனைத்து விதமான நடவடிக்கைகளும் தொடர்கின்றன.
பொது மக்கள் உதவியுடன் பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் பைத்துல்மால் முக்கியப் பங்காற்றி வருவதன் மூலம் மக்களை வட்டி என்னும் சாபத்திலிருந்தும், கொடுமையிலிருந்தும் காப்பாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது. இது நமது சமூக தேவை மட்டுமன்று இஸ்லாத்தின் முக்கிய வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் என்ற உணர்வும் இப்பணியை இறுகப் பற்றி செயலாற்ற உதவி வருகின்றது.
ரமலான் வசூல், குர்பானித் தோல் மற்றும் இதர நன்கொடைகள் விநியோகிக்க பைத்துல்மால் முறையாக திட்டமிட்டு செயல்படுகிறது. பைத்துல்மாலுக்கு வரும் நிதிகளில் கல்விக்காக 40%மும், மருத்துவ உதவிக்காக 25%மும், திருமணத்திற்காக 25%மும், நிவாரணப் பணிக்காக 10%மும் முறையாய் பிரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. மிகுந்த கட்டமைப்புடன் இயங்கி வரும் இவர்கள், பிற பகுதிகளில் இதுபோன்ற பைத்துல்மால்கள் அமைக்க மிகவும் அக்கரையான ஆலோசனைகளை வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
915, ஹாஜி அப்துர் ரஹீம் சாஹிப் தெரு, கோட்டை, வாணியம்பாடி, வேலூர் மாவட்டம் & 636 751. போன்: 04174-225481, Website: www,ibmvnb.org
- ஹவ்வா மைந்த ன்
 
 
 
 
 
 

islamnewsbook web Copyright © 2009 Template is Designed by alaudeen